செய்திகள்
நாகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை
நாகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீவழூர் புத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் சம்பவதன்று பாப்பாக்கோயில் குடநெய்வேலி பகுதியில் உள்ள அன்பழகன் என்பவரது வீட்டிற்கு பின்னால் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து கிராமநிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார், செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.