வேதாரண்யம் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, வேட்டைக்காரனிருப்பு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும் மருதூர் ராசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மகள் சத்யா (22) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 2½ வயதில் விஷ்ணுபரண் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சத்யா சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி சத்யாவின் தந்தை கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அறிவழகன் வழக்கு பதிவு செய்து சத்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
திருமணமான 4 ஆண்டுகளில் சத்யா இறந்ததால் இது குறித்து நாகை ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.