செய்திகள்

நாகையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-10-05 20:15 IST   |   Update On 2017-10-05 20:15:00 IST
நாகையில் கணவருடம் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகூர், புதிய கல்லார் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ஹனுஜா (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் ஹனுஜா கணவரிடம் நமக்கு புதிய வீடு கட்ட வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். நடராஜனும் விரைவில் புதிய வீடு கட்டுவோம் என்று கூறிவந்தார். ஆனால் சம்பவதன்று ஹனுஜா புதிய வீடு கட்டியே ஆக வேண்டும் என்று நடராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பொருட்படுத்தாமல் நடராஜன் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வருகிறேன் என்று குழந்தைகளை அழைத்து சென்றுவிட்டார்.

அவர் சென்ற பிறகு மனஉளைச்சலில் இருந்த ஹனுஜா சேலையில் தூக்கு போட்டு கொண்டார். வீடு திரும்பிய நடராஜன் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஹனுஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News