செய்திகள்

திருமங்கலம் அருகே விபத்து: கல்லூரி மாணவி பலி

Published On 2017-09-23 17:39 GMT   |   Update On 2017-09-23 17:39 GMT
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள பாறைகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் அர்ச்சனா (வயது19). அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து உறவினர் பால்பாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் பாறைகுளம் புறப்பட்டார். 4 வழிச்சாலையில் மேலக்கோட்டை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சரிந்தது.

இந்த விபத்தில் அர்ச்சனா பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை அர்ச்சனா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News