செய்திகள்

சேவை இல்லம்-குழந்தைகள் காப்பக காலி பணியிடம் நிரப்பப்படும்: கலெக்டர் லதா தகவல்

Published On 2017-09-22 16:59 GMT   |   Update On 2017-09-22 16:59 GMT
சேவை இல்லம்- குழந்தைகள் காப்பக காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் அரசு சமூகநலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு சேவை இல்லம் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் காலியாக உள்ள இளநிலை இல்லக் காப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இளநிலை இல்லக் காப்பாளர் பணியிடங்களில் பணிபுரிய விரும்புவோர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றிருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு 25 முதல் 35 வயது வரையும், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் எனில் 25 வயது முதல் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை கண் காணிப்பாளர், அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, பையூர் பிள்ளை வயல், வள்ளிச்சந்திரா டவுன்சிப், அரசு குழந்தைகள் காப்பகம் பின்புறம் சிவகங்கை வசம் நேரில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News