செய்திகள்
பழவந்தாங்கல் அருகே செயின் பறிப்பு: கொள்ளையன் கைது
பழவந்தாங்கல் அருகே செயின் பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
பழவந்தாங்கல் அருகே மூவரசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரத்னவேல் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது, பழைய பல்லாவரத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பதும், மூவரசம்பட்டி பகுதியில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.