செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பா.ம.க. பேனர் தீ வைத்து எரிப்பு-மறியல்

Published On 2017-09-14 15:00 IST   |   Update On 2017-09-14 15:00:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே இன்று காலை பா.ம.க. பேனரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். பேனருக்கு தீ வைத்தவர்களை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் காட்டுரோட்டில் பா.ம.க. சார்பில், விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டை வரவேற்று பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை அங்கு வந்த மர்ம நபர்கள் பேனருக்கு தீ வைத்து தப்பி சென்று விட்டனர். இதில் பேனர் முழுவதும் எரிந்து சாம்பலானது.

இதுபற்றி அறிந்ததும் பா.ம.க. வினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பேனருக்கு தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர், பூந்த மல்லி- அரக்கோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Similar News