செய்திகள்
மானாமதுரை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி
மானாமதுரை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள காட்டுஉடைகுளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மகன் மருது (வயது 9). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
4 நாட்களுக்கு முன்பு மருது காய்ச்சலால் அவதிப்பட்டான். உடனடியாக அவனை மானாமதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருதுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மருதுவை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மருதுவை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறினார்கள். இந்த நிலையில் மருது பரிதாபமாக இறந்தான்.
இதனால் காட்டு உடைகுளம் பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உடனே மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள காட்டுஉடைகுளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மகன் மருது (வயது 9). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
4 நாட்களுக்கு முன்பு மருது காய்ச்சலால் அவதிப்பட்டான். உடனடியாக அவனை மானாமதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருதுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மருதுவை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மருதுவை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறினார்கள். இந்த நிலையில் மருது பரிதாபமாக இறந்தான்.
இதனால் காட்டு உடைகுளம் பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உடனே மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.