செய்திகள்
மாமல்லபுரத்தில் பின்லாந்து நாட்டு பெண்ணை கற்பழிக்க முயற்சி
மாமல்லபுரத்தில் பின்லாந்து நாட்டு பெண்ணை கற்பழிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
பின்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண் மாமல்லபுரத்தில் தங்கி தனியார் தொண்டு நிறுவனத்தில் மனிதவள ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 8-ந்தேதி இரவு அவர் கேளம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஆட்டோவில் வந்தார். பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது ஆட்டோவில் இருந்த மற்ற பயணிகள் இறங்கி விட்டனர். பின்லாந்து இளம்பெண் மட்டும் இருந்தார்.
இதனை பயன்படுத்தி டிரைவர், ஆட்டோவை மறைவான இடத்துக்கு ஓட்டிச்சென்று இளம் பெண்ணை கற்பழிக்க முயன்றார். அவனிடம் இருந்து தப்பிய இளம்பெண் இதுகுறித்து தூதரகத்தில் புகார் செய்தார். இதுபற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டிவரும் டிரைவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சந்தேகத்திற்கிடமாக ஒருவரை போலீசார் பிடித்து சென்று உள்ளனர்.
பின்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண் மாமல்லபுரத்தில் தங்கி தனியார் தொண்டு நிறுவனத்தில் மனிதவள ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 8-ந்தேதி இரவு அவர் கேளம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஆட்டோவில் வந்தார். பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது ஆட்டோவில் இருந்த மற்ற பயணிகள் இறங்கி விட்டனர். பின்லாந்து இளம்பெண் மட்டும் இருந்தார்.
இதனை பயன்படுத்தி டிரைவர், ஆட்டோவை மறைவான இடத்துக்கு ஓட்டிச்சென்று இளம் பெண்ணை கற்பழிக்க முயன்றார். அவனிடம் இருந்து தப்பிய இளம்பெண் இதுகுறித்து தூதரகத்தில் புகார் செய்தார். இதுபற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டிவரும் டிரைவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சந்தேகத்திற்கிடமாக ஒருவரை போலீசார் பிடித்து சென்று உள்ளனர்.