குரோம்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
தாம்பரம்:
குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே சுடுகாடு அருகே உள்ள வீட்டில் வசிக்கும் ரூபன்பாபு என்பவர் குரோம்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டில் இருந்த மனைவி கவுரிக்கு போன் செய்து வீட்டுக்கு வர வேண்டாம்.
நான் எனது நண்பருடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்து விட்டோம். உடலை மாடியில் இருந்து சுடுகாட்டில் வீசினோம். வீட்டில் ரத்த கறையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவுரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரத்த கறையாக இருந்தது. இது குறித்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
எனவே ரூபன்பாபுவும், அவரது நண்பரும் சேர்ந்து வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்து வீசி இருப்பது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் அருகே ஓட்டுனர் உரிமம் கிடந்தது. அதில் லியாகத்அலி, பல்லா வரம் என்று முகவரி இருந்தது. ஆனால் இறந்தவர் லியாகத்அலிதானா? என் பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
தலைமறைவாக உள்ள ரூபன்பாபு, அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.