செய்திகள்

ஆதம்பாக்கத்தில் மின்வாரிய ஊழியர் வீடு- விநாயகர் கோவிலில் கொள்ளை

Published On 2017-09-06 15:06 IST   |   Update On 2017-09-06 15:07:00 IST
ஆதம்பாக்கத்தில் மின்வாரிய ஊழியர் வீடு- விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர் விரிவாக்கத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் மின்வாரிய ஊழியர்.

நேற்று இரவு அவர் வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் தூங்கினார். இன்று அதிகாலை எழுந்த போது வீட்டுக்கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

பீரோவில் இருந்த 20 பவுன் நகையை காணவில்லை. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

ஆதம்பாக்கம், ராம கிருஷ்ணாபுரம், 3-வது தெருவில் விநாயகர் கோவில் உள்ளது. கோவிலுக்குள் புகுந்த மர்மகும்பல் உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச் சென்று விட்டனர். மெயின் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்த பொருட்கள் தப்பியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 பவுன் நகை கொள்ளை போனது. கொள்ளையர்கள் இதுவரை சிக்கவில்லை. தொடரும் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கொருக்குப்பேட்டை மேயர் பாசுதாவ் தெருவில் வசித்து வருபவர் பானுமதி. இவரது வீட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகை மாயமானது. பீரோ உடைக்கப்படவில்லை.

எனவே வீட்டுக்குள் வந்து சென்ற யாரேனும் நகையை திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News