செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே ஏ.டி.எம். கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2017-08-20 15:51 GMT   |   Update On 2017-08-20 15:51 GMT
ஜெயங்கொண்டம் அருகே ஏடிஎம் மையங்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுந்தர்ராஜன் (24). இவர் தொடர்ந்து ஏடிஎம் மையங்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்துள்ளதாக இவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, டிஎஸ்பி கென்னடி, எஸ்பி அபினவ்குமார் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா சுந்தர்ராஜனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்திரவிட்டார்.

Tags:    

Similar News