செய்திகள்

சீர்காழி அருகே மாணவனை தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் கைது

Published On 2017-08-17 10:43 GMT   |   Update On 2017-08-17 10:43 GMT
சீர்காழி அருகே பள்ளி மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் அன்பரசன் (வயது 15). இவர் துளசேந்திர புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு சென்ற அன்பரசன் பள்ளியில் நிகழ்ச்சி முடிந்து கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த மணி (34), விஜி (35) ஆகியோர் அன்பரசனிடம் எங்கள் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்சை காணவில்லை அதை நீ தான் எடுத்து விட்டாய் என்று கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அன்பரசன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அன்பரசன் தந்தை மாரியப்பன் தன்னுடைய மகன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மணி, விஜி ஆகிய 2 பேரின் தூண்டுதலின் பேரிலே மாணவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே 2 பேரையும் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News