செய்திகள்

சீர்காழி அருகே சுதந்திர தினவிழாவிற்கு சென்ற பள்ளி மாணவன் மர்ம சாவு

Published On 2017-08-16 14:14 GMT   |   Update On 2017-08-16 14:14 GMT
சீர்காழி அருகே பள்ளி மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சீர்காழி:

சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் அன்பரசன் (வயது 15). இவர் துளசேந்திர புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று 71-வது சுதந்திர தினவிழா பள்ளியில் கொண்டாடப்பட்டது. அதற்காக அன்பரசன் சென்றுள்ளார். நிகழ்ச்சி மதியம் நிறைவடைந்தது. பின்னர் அன்பரசன் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் அன்பரசனிடம் எங்கள் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்சை காணவில்லை அதை நீ தான் எடுத்து விட்டாய் என்று அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாலையில் அன்பரசன் சந்தபடுகை பகுதியில் வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாரியப்பன் தன்னுடைய மகன் சாவில் மர்மம் இருப்பதாக கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். பள்ளி மாணவன் மர்ம மான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News