செய்திகள்

நெடுந்தீவு அருகே வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Published On 2017-08-14 03:25 GMT   |   Update On 2017-08-14 03:25 GMT
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகை:

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

பருத்தித்துறை கடற்பகுதி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் சென்ற படகும் சிறைபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Tags:    

Similar News