செய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு:
தமிழக கிராமப்புற மாணவ-மாணவிகளின் மருத்துவ கல்வியை பாதிக்கும் நீட் தேர்வை மத்திய-மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம், காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் நல்லுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டதை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சக்திவேல்பாண்டியன், மகாமூர்த்தி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நித்யா நன்றி கூறினார்.
தமிழக கிராமப்புற மாணவ-மாணவிகளின் மருத்துவ கல்வியை பாதிக்கும் நீட் தேர்வை மத்திய-மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம், காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் நல்லுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டதை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சக்திவேல்பாண்டியன், மகாமூர்த்தி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நித்யா நன்றி கூறினார்.