செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை: அம்மாபேட்டையில் 50 மி.மீட்டர் பதிவு

Published On 2017-08-11 17:21 IST   |   Update On 2017-08-11 17:21:00 IST
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு அம்மாபேட்டை பகுதியில் மட்டும் 50.4 மி.மீ.மழை கொட்டியது.
அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது.

நேற்று இரவு அம்மாபேட்டை பகுதியில் மட்டும் 50.4 மி.மீ.மழை கொட்டியது. இதே போல் பவானியிலும் 40 மி.மீட்டர் மழை பெய்தது.

இதே போல் தாளவாடி, கொடுமுடி, ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் பாய்ந்து ஓடியது.

ஈரோடு நகரில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ந்தது. இந்த மழையால் அப்பகுதி குளுமையானது. வெப்பம் அடியோடு குறைந்தது. தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதையொட்டி ஈரோடு மாவட்ட விவசாயகளும் பொது மக்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Similar News