செய்திகள்
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக 52 அடியாக இருந்த நீர் மட்டம், இன்று 53 அடியை தொட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பவானிசாகர் அணை நீர்பிடிப்பு யிலும் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1950 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1000 கன அடிக்கு மேல் தொடர்ந்து தண்ணீர் வருவதையொட்டி அணையின் நீர்மட்டமும் கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.
நேற்று 52 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம், இன்று 53 அடியை தொட்டது. பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக வினாடிக்கு 165 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பவானிசாகர் அணை நீர்பிடிப்பு யிலும் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1950 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1000 கன அடிக்கு மேல் தொடர்ந்து தண்ணீர் வருவதையொட்டி அணையின் நீர்மட்டமும் கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.
நேற்று 52 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம், இன்று 53 அடியை தொட்டது. பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக வினாடிக்கு 165 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.