செய்திகள்

நாகையில் போலீசாரை தள்ளி விட்டு கைதி தப்பி ஓட்டம்

Published On 2017-08-10 15:46 IST   |   Update On 2017-08-10 15:46:00 IST
நாகையில் போலீசாரை தாக்கி விட்டு கைதி தப்பி ஓடியதால் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடியை சேர்ந்தவர் விஜயன். இவன் மீது பல்வேறு வழக்கு உள்ளது. இவனை ஒரு திருட்டு வழக்கில் கீழ் வேளூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த நிலையில் அவனது காவல் முடிவடைந்ததையொட்டி மீண்டு ம் நாகை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவனுக்கு மேலும் 15 நாள் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு கவிதா உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து விஜயனை மீண்டும் சிறைக்கு போலீஸ்காரர்கள் ராஜேந்திரன், ரமணி ஆகியோர் அழைத்து வந்தனர். அப்போது போலீஸ்காரர்களை தள்ளி விட்டு அவன் தப்பி ஓடி விட்டான். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.

Similar News