செய்திகள்

மானாமதுரையில் பலத்த மழை

Published On 2017-08-09 19:34 IST   |   Update On 2017-08-09 19:34:00 IST
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் பல நாட்களுக்கு பிறகு ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

மானாமதுரை:

மானாமதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மழை இல்லாத நிலை இருந்தது. நேற்று மாலை 6.40 மணிக்கு பெய்த மழை 1 மணி நேரம் நீடித்தது.

திடீர் மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திடீர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மானாமதுரை சுந்தரபுரம் கடை வீதியில் வாரச்சந்தை முதல் தேவர் சிலை வரை சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தேங்காமல் தடுக்க சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பேரூராட்சி வணிக வளாகம் முன்பு மட்டும் அமைக்கப்பட்டும், மீதம் உள்ள தேவர் சிலை வரை சாலையின் இரு புறங்களிலும் அமைக்கப்படாததால் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபகுதியிலும் சிமெண்டு கற்கள் பதிப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Similar News