செய்திகள்
காரைக்குடியில் பாத்திர வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை
காரைக்குடியில் பாத்திர வியாபாரி வீட்டில் 16 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி தேரோடும் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது48). பாத்திரக்கடை உரிமையாளர். இவர் நேற்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். மனைவி மற்றும் மகள் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் யாரும் இல்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். மாலையில் கணேசனின் மகன் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த 16 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக கணேசன் தெரிவித்தார். தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த்ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி தேரோடும் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது48). பாத்திரக்கடை உரிமையாளர். இவர் நேற்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். மனைவி மற்றும் மகள் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் யாரும் இல்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். மாலையில் கணேசனின் மகன் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த 16 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக கணேசன் தெரிவித்தார். தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த்ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.