செய்திகள்

வேதாரண்யம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலி

Published On 2017-08-02 09:40 GMT   |   Update On 2017-08-02 09:40 GMT
வேதாரண்யம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (40). மீனவர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். வேதாரண்யம் - நாகை சாலையில் புதுப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகில் முருகேசன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னால் ஒரு லாரி சென்றது. அதன் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். பின்னால் வந்து கொண்டிருந்த முருகேசன் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுசீலா மேரி வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.

விபத்தில் பலியான முருகேசனுக்கு மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

Tags:    

Similar News