செய்திகள்

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் காயம்

Published On 2017-08-01 16:37 IST   |   Update On 2017-08-01 16:38:00 IST
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தைச் சேர்ந்த குப்பையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமொழி (வயது32). இவர் சம்பவத்தன்று டியூசனுக்கு சென்ற குழந்தைகளை அழைப்பதற்காக வேதாரண்யம் குருகுலம் அருகே மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்த போது தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த வீராச்சாமி (55) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மணிமொழி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத் தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News