செய்திகள்
அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவி பலி
டெங்கு காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அந்தியூர் மற்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுபாளையம் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் விஜயன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள்.
இந்த தம்பதியினருக்கு சரவணன்(15), மணிபாரதி(10), என்ற 2 மகன்களும், திவ்யதர்ஷினி(8) என்ற மகளும் உள்ளனர். இதில் திவ்யதர்ஷினி அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சிறுமி திவ்யதர்ஷினிக்கு கடந்த ஒரு வாரமாக கடுமையாக காய்ச்சல் அடித்தது. அந்தியூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
பிறகு சிறுமியை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கிருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் சேலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி திவ்யதர்ஷினி பரிதாபமாக இறந்தாள். டெங்குவால் பாதிக்கப்பட்டு 3-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு டெங்கு நோய் தடுப்பு குழுவினர் விரைந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுபாளையம் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் விஜயன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள்.
இந்த தம்பதியினருக்கு சரவணன்(15), மணிபாரதி(10), என்ற 2 மகன்களும், திவ்யதர்ஷினி(8) என்ற மகளும் உள்ளனர். இதில் திவ்யதர்ஷினி அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சிறுமி திவ்யதர்ஷினிக்கு கடந்த ஒரு வாரமாக கடுமையாக காய்ச்சல் அடித்தது. அந்தியூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
பிறகு சிறுமியை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கிருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் சேலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி திவ்யதர்ஷினி பரிதாபமாக இறந்தாள். டெங்குவால் பாதிக்கப்பட்டு 3-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு டெங்கு நோய் தடுப்பு குழுவினர் விரைந்து உள்ளனர்.