செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக ஸ்டிரைக்: ஜவுளி உற்பத்தியாளர்கள் மனித சங்கிலி போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஜி.எஸ்.டி.வரி விதிப்பு மூலம் ஜவுளி ரகங்களுக்கு 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 35 ஆயிரம் விசைத்தறி கூடங்களும் தங்கள் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவிக்க ஜவுளி-விசைத்தறி உற்பத்தியாளர்கள் பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே வ.உ.சி.பூங்காவில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
வாயில் கருப்பு துணிக்கட்டி போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதமும் இருந்தனர். இன்று ஜவுளி, விசைத்தறியாளர்களின் ஒரு பிரிவினர் சென்னைக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர்.மற்றொரு பிரிவினர் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் கைகளை கோர்த்தப்படி அணி வகுத்து வரிசையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் இன்று வரை ரூ.150 கோடி வரை வர்த்தகம் முடங்கி உள்ளது. அதே போன்று விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டதால் இன்று வரை ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.வரி விதிப்பு மூலம் ஜவுளி ரகங்களுக்கு 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 35 ஆயிரம் விசைத்தறி கூடங்களும் தங்கள் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவிக்க ஜவுளி-விசைத்தறி உற்பத்தியாளர்கள் பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே வ.உ.சி.பூங்காவில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
வாயில் கருப்பு துணிக்கட்டி போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதமும் இருந்தனர். இன்று ஜவுளி, விசைத்தறியாளர்களின் ஒரு பிரிவினர் சென்னைக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர்.மற்றொரு பிரிவினர் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் கைகளை கோர்த்தப்படி அணி வகுத்து வரிசையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் இன்று வரை ரூ.150 கோடி வரை வர்த்தகம் முடங்கி உள்ளது. அதே போன்று விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டதால் இன்று வரை ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.