செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை

Published On 2017-06-29 14:03 IST   |   Update On 2017-06-29 14:03:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூரில் புதிதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு உள்ளது. நேற்று மாலை கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. லாரிகள் மூலம் மதுபாட்டில்களை இறக்கினர்.

இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்பட மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு புதிய மதுக்கடை திறக்கப்பட்டது. பொது மக்களின் போராட்டத்தையடுத்து இந்த மதுக்கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள், மாணவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Similar News