செய்திகள்

வேதாரண்யம் அருகே தாயை வெட்டி கொன்ற மகன்

Published On 2017-06-28 11:13 GMT   |   Update On 2017-06-28 11:13 GMT
வேதாரண்யம் அருகே தகராறில் தாயை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி தெற்கு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. விவசாயி. இவரது மனைவி குப்பம்மாள் (75). இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று மதியம் குப்பம்மாள் வீட்டின் அருகே உள்ள குட்டை ஓரத்தில் கீற்று பின்னிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மகன் ராமச்சந்திரன் தாயிடம் ஏதோ கேட்க அவர்களுக்குள் தகராறு உருவானது.

இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அரிவாளால் குப்பம்மாளை வெட்டி குட்டையில் தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயசங்கர் வேட்டைக்காரனிருப்பு போலீசாருக்கும், தாசில்தாருக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் டி.எஸ்.பி. பாலு, இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று குப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான ராமச்சந்திரனை தேடி வருகிறார்கள்.

தாயை மகன் வெட்டி கொன்ற சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News