செய்திகள்
மடிப்பாக்கம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
மடிப்பாக்கம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாம்பரம்:
மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசம்பட்டு அம்மன் நகரில் மதுக்கடை உள்ளது. அதே பகுதியில் கூடுதலாக 2 மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மதுக்கடையை மூடக்கோரி இன்று காலை பா.ம.க.வினர். திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டச் செயலாளர் மாடம்பாக்கம் மதன், பசுமை தாயகம் ஒருங்கிணைப்பாளர் ஐ.நா.கண்ணன், பூக்கடை முனுசாமி, முருகேசன், ஆனந்தன் மற்றும் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பெண்கள் மதுக்கடையை மூடக்கோரி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
ஆலப்பாக்கம், மதுரவாயல் மெயின் ரோட்டில் மதுக்கடை உள்ளது. இதை மூடக்கோரி பா.ம.க. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் பகுதி செயலாளர் கணேஷ், முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.சேகர், வட்ட செயலாளர் செல்வராஜ், மாநில அமைப்பு செயலாளர் பாண்டுரங்கன், பகுதி துணை செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மதுக்கடை இன்று திறக்கப்படவில்லை. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசம்பட்டு அம்மன் நகரில் மதுக்கடை உள்ளது. அதே பகுதியில் கூடுதலாக 2 மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மதுக்கடையை மூடக்கோரி இன்று காலை பா.ம.க.வினர். திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டச் செயலாளர் மாடம்பாக்கம் மதன், பசுமை தாயகம் ஒருங்கிணைப்பாளர் ஐ.நா.கண்ணன், பூக்கடை முனுசாமி, முருகேசன், ஆனந்தன் மற்றும் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பெண்கள் மதுக்கடையை மூடக்கோரி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
ஆலப்பாக்கம், மதுரவாயல் மெயின் ரோட்டில் மதுக்கடை உள்ளது. இதை மூடக்கோரி பா.ம.க. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் பகுதி செயலாளர் கணேஷ், முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.சேகர், வட்ட செயலாளர் செல்வராஜ், மாநில அமைப்பு செயலாளர் பாண்டுரங்கன், பகுதி துணை செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மதுக்கடை இன்று திறக்கப்படவில்லை. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.