செய்திகள்

மாமல்லபுரம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த 2 பெண்கள் கார் மோதி பலி

Published On 2017-06-26 17:30 GMT   |   Update On 2017-06-26 17:30 GMT
மாமல்லபுரம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த 2 பெண்கள் மீது கார் மோதியதில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாமல்லபுரம்:

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார், காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடம்பாடி என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் புகுந்தது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த கடம்பாடி கிராமத்தை சேர்ந்த உஷா (வயது 38), முருகம்மாள் (35) ஆகியோர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

மேலும், காயம் அடைந்த ராமு (29) என்பவர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News