செய்திகள்

வேதாரண்யம் அருகே கணவன் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

Published On 2017-06-22 16:16 IST   |   Update On 2017-06-22 16:16:00 IST
வேதாரண்யம் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தாணி கோட்டகம் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் மகேந்திரன் (வயது 32). இவர் கடந்த 18-ந் தேதி கோடியம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் மீன்கள் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மீன்கள் பிடிப்பதற்காக குளத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.

குளத்தில் சேறும், சகதியும் உள்ளதால் குளத்தில் மூழ்கி மயங்கிவிட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் மகேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மகேந்திரனுக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த அன்பரசி சம்பவதன்று வீட்டின் பின்புறம் உள்ள முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மாமியார் நாகம்மாள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வாய்மேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பரசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த சோகம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News