செய்திகள்

புதுக்கோட்டை அருகே பலத்த மழை: மின்னல் தாக்கியதில் விவசாயி பலி

Published On 2017-06-17 15:56 IST   |   Update On 2017-06-17 15:56:00 IST
புதுக்கோட்டை அருகே பெய்த பலத்த மழையால் மின்னல் தாக்கி விவசாயி பலியானார். இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே பெய்த பலத்த மழையால் மின்னல் தாக்கி விவசாயி பலியானார். இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள கோட்டைக்காரன்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(வயது 45). விவசாயி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சந்தோஷ், தினேஷ் என்ற 2 மகன்களும், சேர்மலதா, சவுந்தர்யா என்ற மகள்களும் உள்ளனர்.

நேற்று மாலை கணேசன், சேர்மலதாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. இதில் மின்னல் தாக்கியதில் கணேசன் உடல் கருகினார். மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் சேர்மலதா மயக்கமடைந்தார்.

இதையடுத்து அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நீர்பழனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சேர்மலதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News