செய்திகள்

ஆதம்பாக்கத்தில் குடிநீர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2017-06-17 15:13 IST   |   Update On 2017-06-17 15:13:00 IST
ஆதம்பாக்கத்தில் ராட்சத குடிநீர் தொட்டி உதவி பொறியாளர் அலுவலகத்தை 60-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் பரமேஸ்வர் நகர் பாலகிருஷ்ணபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரித்தனர்.

ஆனாலும் நடவடிக்கை எடுக்காததால் இன்று ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகரில் உள்ள ராட்சத குடிநீர் தொட்டி உதவி பொறியாளர் அலுவலகத்தை 60-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Similar News