செய்திகள்

சென்னிமலை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து சமையல் தொழிலாளி பலி

Published On 2017-06-10 17:06 IST   |   Update On 2017-06-10 17:13:00 IST
சென்னிமலை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து சமையல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை:

திருப்பூர் மாவட்டம், வீர பாண்டி அருகே வலசு பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 46). இவர் ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே சில்லாங் காட்டு வலசை சேர்ந்த சமையல் கான்ட் ராக்டர் ரவி என்பவரிடம் சமையல் வேலை செய்து வந்தார்.

இவர் ஊத்துக்குளியில் நடந்த ஒரு திருமணத்துக்கு சமையல் வேலைக்கு சென்றார். சமையல் வேலையை முடித்து விட்டு ஊத்துக்குளியில் இருந்து சரக்கு ஆட்டோவில் சில்லாங் காட்டுவலசு வந்து கொண்டிருந்தார்.

ஆட்டோவை சமையல் கான்ட்ராக்டர் ரவி மகன் ஹரிஹரன் ஓட்டினார். அந்த ஆட்டோவில், ரவி மனைவி லட்சுமி, அய்யம் பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோரும் வந்தனர்.

ஆட்டோ சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சிறுக்களஞ்சி என்ற இடத்தில் வந்து கொண்டி ருந்தது. ஒரு வளையில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக ரோட்டோரம் இருந்த ஆலமரத்தில் மோதியது.

இதில் ஆட்டோ கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே சமையல் தொழிலாளி செல்வராஜ் இறந்தார். ஆட்டோவில் வந்த லட்சுமி, மோகன்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விபத்தில் இறந்த செல்வராஜுக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News