செய்திகள்
கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை
கோபி அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் வாட்டர் டேங்க் பைப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோபி:
கோபி அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் மாதையன் மனைவி மணி (வயது 46). இவர் சில தினங்களுக்கு முன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று ஆஸ்பத்திரி பின் பகுதிக்கு சென்றார். அங்கு அவர் ஒரு வாட்டர் டேங்க் பைப்பில் தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து மணி உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.