செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-06-01 12:17 GMT   |   Update On 2017-06-01 12:17 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீமுஷ்ணம்:

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 26). கார் டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த கவியரசன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.

காலையில் நீண்ட நேரமாகியும் கவியரசன் அறை கதவு திறக்கப்படவில்லை. வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது கவியரசன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். கவியரசன் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுக்குறித்து கவியரசனின் தந்தை சண்முகம் குமராட்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கவியரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கவியரசன் தீராத வயிற்று வலியினால் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.
Tags:    

Similar News