செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது
ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மகனுக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன். இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியம்-ஜெயந்தி தம்பதியினரின் மகள் திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா பிரசவத்துக்காக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள 24 கேர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
இன்று அதிகாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகளையும், குழந்தையையும் சுப்பிரமணியமும், ஜெயந்தி மற்றும் உறவினர்கள் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். மகனையும், பேரனையும் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன். இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியம்-ஜெயந்தி தம்பதியினரின் மகள் திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா பிரசவத்துக்காக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள 24 கேர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
இன்று அதிகாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகளையும், குழந்தையையும் சுப்பிரமணியமும், ஜெயந்தி மற்றும் உறவினர்கள் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். மகனையும், பேரனையும் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.