செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி

Published On 2017-05-28 11:07 GMT   |   Update On 2017-05-28 11:07 GMT
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம் என்று சென்னிமலை முருகனை தரிசித்து விட்டு வெளியே வந்த நடிகர் பார்த்திபன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு நடிகர் பார்த்திபன் வந்தார். சென்னிமலை முருகனை தரிசனம் செய்தார். அப்போது பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சூப்பர் ஸ்டார்ரஜினி காந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து கூறலாம். ஆனால் அவர் ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார். ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.


ரஜினி ஆண்டவனிடம் நேரடி தொடர்பு வைத்துள்ளார். எனக்கு நேரடி தொடர்பு இல்லை. இருந்தால் இது குறித்து நானே ஆண்டவனிடம் கேட்டு சொல்லிவிடுவேன். அவர் ஆண்டவனிடம் பேசி சொல்லும் வரை பொறுமை காப்போம்.

இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

Tags:    

Similar News