செய்திகள்

கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்த தம்பதியினர்: ஈரோடு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2017-05-25 15:59 GMT   |   Update On 2017-05-25 15:59 GMT
கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் தம்பதியினர் விஷம் குடித்தனர். பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஈரோடு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பவானி:

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி வாகராம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இவரது மனைவி பாரதி (50). விசைத்தறித் தொழிலாளர்கள்.

இவர்கள் கருமத்தம் பட்டியில் உள்ளவிசைத்தறிப் பட்டறையில் முன்பணமாக ரூ.80ஆயிரம் பெற்றுக் கொண்டுவேலைசெய்து வந்தனர். இந்நிலையில் போதிய வேலை இல்லாததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வாங்கிய பணத்தைத்திரும்பச் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் நாமக்கல் மாவட்டம்,பள்ளி பாளையத்தை அடுத்தஆலம் பாளையத்தில்உள்ள பட்டறையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்துள்ளனர்.

இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தற்போது பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், என்ன செய்வது என்றறியாமல் தவித்த கணவன், மனைவி இருவரும் பவானி கூடுதுறை பகுதிக்கு நேற்று மாலை வந்தனர். அங்கு ஏற்கெனவே தயாராக வைத்திருந்த எலிமருந்தைத் தின்று தற்கொலை செய்ய கொள்ள முயன்றனர். இதைக் கண்ட பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி சிகிச்சைக்குப்பின்னர் இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News