செய்திகள்

ஈரோடு பஸ் நிலையத்தில் திருவோடு ஏந்தி பஸ் தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2017-05-16 17:23 IST   |   Update On 2017-05-16 17:23:00 IST
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு:

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று பல்வேறு இடங்களில் பஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு பஸ் நிலையத்தில் அனைத்து போக்குவரத்து தொழிற் சங்கங்களின் சார்பில் அதன் தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டி.ஐ.டி.யூ, எஸ்.பி.எப், எச்.எம்.எஸ் உள்பட 8 சங்கங்கள் கலந்து கொண்டன. சுமார் 150பேர் பஸ்நிலையத்தில் கூடினர். அப்போது அவர்கள் மேலே சட்டை அணியாமல் அரை நிர்வாணக் கோலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை கேட்பதுபோல் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர். நெற்றியில் நாமமும் போட்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் "எங்கள் பணத்தை எடுத்து செலவு செய்வது நியாயமா?'' "நிறைவேற்று நிறைவேற்று தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று'' போன்ற கோஷங்களை எழுப்பினர். அமைதியான முறையில் போராட்டம் செய்ததால் யாரும் கைது செய்யப் படவில்லை.

பாதுகாப்பு பணியில் டவுன் போலீஸ் டி.எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

Similar News