செய்திகள்

கிருமாம்பாக்கம் அருகே கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

Published On 2017-05-16 10:15 GMT   |   Update On 2017-05-16 10:15 GMT
கிருமாம்பாக்கம் அருகே தாறுமாறாக வந்த கார் மோதியதில் எல்.ஐ.சி. முகவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
பாகூர்:

கடலூர் அண்ணா நகர் ஆர்.பி.எஸ். தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). எல்.ஐ.சி. முகவர். நேற்று இரவு இவரும், இவரது நண்பரான கடலூர் மஞ்சக்குப்பம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரும் புதுவை சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

கிருமாம்பாக்கம் அருகே காட்டு குப்பம் என்ற இடத்தில் வந்த போது, எதிரே தாறுமாறாக வந்த கார் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாண்டியன் உடல் நசுங்கி இறந்து போனார். கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தேவன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News