செய்திகள்

நெய்வேலி அருகே மாரியம்மன் கோவிலில் திருடு போன ஐம்பொன் சிலை மீட்பு

Published On 2017-05-16 13:09 IST   |   Update On 2017-05-16 13:09:00 IST
நெய்வேலி அருகே சில நாட்களுக்கு முன்பு மாரியம்மன் கோவிலில் திருடு போன ஐம்பொன் சிலையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:

நெய்வேலி அருகே கொள்ளிருப்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 9ந்தேதி இந்த கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான மாரியம்மன் சிலையை திருடிச்சென்றனர்.

இதுகுறித்து தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், கொள்ளிருப்பில் இருந்து மேலக்குப்பம் செல்லும் வழியில் பழனிவேல் என்பவரது நிலத்தின் ஓரத்தில் அம்மன் சிலை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்தவர்கள் தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து, அந்த சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் அந்த சிலை கொள்ளிருப்பு மாரியம்மன் கோவிலில் திருடுப்போன ஐம்பொன் சிலை என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிலையை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

திருடி நிலத்தில் வைத்துவிட்டு சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News