செய்திகள்

கானாத்தூரில் வீட்டு பூட்டை உடைந்து 30 பவுன் கொள்ளை

Published On 2017-05-11 15:36 IST   |   Update On 2017-05-11 15:37:00 IST
கானாத்தூரில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:

நீலாங்கரை அடுத்த கானாத்தூர் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ராணி. இவர்களது மகள் ஹேமலதாவுக்கு 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

சித்ரா பவுர்ணமியை யொட்டி தாலியை பிரித்து கட்டும் நிகழ்ச்சிக்காக தாய் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று இரவு அனைவரும் திருவான்மியூர் பாம்பன் சாமி கோவிலுக்கு சென்று தங்கினர். இன்று காலை வீட்டுக்கு வந்தபோது கிரில் கேட் உடைந்து இருந்தது.

பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ.1½ லட்சம் பணம், பட்டு புடவைகள் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Similar News