செய்திகள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா

Published On 2017-05-07 23:15 IST   |   Update On 2017-05-07 23:15:00 IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கழுக்குன்றம்:

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேர் திருவிழா நடந்தது.

இதையொட்டி வேதகிரீஸ்வரர் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு எதிரே ஆங்காங்கே பக்தர்கள் புளியங்காய், காய்கறிகளை கொட்டியும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நான்கு மாடவீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமிகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. பகல் 12½ மணியளவில் தேர் நிலைக்கு வந்தது.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Similar News