செய்திகள்

நீலாங்கரை அருகே அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

Published On 2017-05-06 14:44 IST   |   Update On 2017-05-06 14:44:00 IST
நீலாங்கரை அருகே அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவான்மியூர்;

நீலாங்கரையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிராஜின் தெருவை சேர்ந்தவர் குப்பு சாமி (26). இவர் தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறு வனத்தில் மானேஜர் ஆக பணிபுரிகிறார்.

இவரது மனைவி மேடவாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று இருந்தார். எனவே குப்புசாமி வீட்டை பூட்டி விட்டு அலுவலகம் சென்று இருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Similar News