செய்திகள்
செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை
செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கரிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சவீதா பிரியா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.
சவீதா பிரியா சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்தார். கடந்த 2½ மாதத்துக்கு முன்பு ஈரோட்டுக்கு மாற்றப்பட்டு ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு சவீதா பிரியா வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொண்டார். குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சவீதா பிரியா பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சவீதா பிரியா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பாராம். இதை அவரது கணவர் கண்டித்தார்.இது தொடர்பாக சவீதா பிரியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட தாம்.
இதனால் மனம் உடைந்த சவீதா பிரியா இந்த விபரீத முடிவை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கரிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சவீதா பிரியா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.
சவீதா பிரியா சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்தார். கடந்த 2½ மாதத்துக்கு முன்பு ஈரோட்டுக்கு மாற்றப்பட்டு ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு சவீதா பிரியா வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொண்டார். குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சவீதா பிரியா பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சவீதா பிரியா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பாராம். இதை அவரது கணவர் கண்டித்தார்.இது தொடர்பாக சவீதா பிரியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட தாம்.
இதனால் மனம் உடைந்த சவீதா பிரியா இந்த விபரீத முடிவை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.