செய்திகள்
சத்தியமங்கலம்- புளியம்பட்டியில் 3-வது நாளாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
சத்தியமங்கலம், புளியம்பட்டியில் 3-வது நாளாக பலத்த மழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் வனப் பகுதிகளான திம்பம், ஆசனூர், தாளவாடி, தலமலை, ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இந்த மழையால் காய்ந்து போய் கிடந்த வனப்பகுதி முழுவதும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் ஓடுகிறது. இதனால் வன விலங்குகளின் குடிநீர் பஞ்சமும் தீர்ந்துள்ளது.
இதே போல பு.புளியம்பட்டியிலும் நேற்று இரவு 8 மணிக்கு மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் கனமாக மழை பெய்தது. பவானிசாகரிலும் மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாளவாடி பகுதியில் 30 மி.மீ மழையும் சத்தியமங்கலத்தில் 20 மி.மீ மழையும் பெய்திருந்தது.
ஈரோட்டில் நேற்று மாலை மழை பெய்வது போல் மேகங்கள் சூழ்ந்து வந்தாலும் காற்று அவற்றை அடித்து சென்றுவிட்டது. இதனால் மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் வனப் பகுதிகளான திம்பம், ஆசனூர், தாளவாடி, தலமலை, ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இந்த மழையால் காய்ந்து போய் கிடந்த வனப்பகுதி முழுவதும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் ஓடுகிறது. இதனால் வன விலங்குகளின் குடிநீர் பஞ்சமும் தீர்ந்துள்ளது.
இதே போல பு.புளியம்பட்டியிலும் நேற்று இரவு 8 மணிக்கு மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் கனமாக மழை பெய்தது. பவானிசாகரிலும் மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாளவாடி பகுதியில் 30 மி.மீ மழையும் சத்தியமங்கலத்தில் 20 மி.மீ மழையும் பெய்திருந்தது.
ஈரோட்டில் நேற்று மாலை மழை பெய்வது போல் மேகங்கள் சூழ்ந்து வந்தாலும் காற்று அவற்றை அடித்து சென்றுவிட்டது. இதனால் மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டது.