செய்திகள்

வடலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2017-04-08 15:04 GMT   |   Update On 2017-04-08 15:04 GMT
வடலூர் அருகே நள்ளிரவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

வடலூர்:

திருவாரூர் மாவட்டம் செல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் வசந்தகுமார் தனது நண்பர் பிரபாகரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து செல்லூருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை வசந்தகுமார் ஓட்டிவந்தார்.

மோட்டார் சைக்கிள் நள்ளிரவில் வடலூர்-கும்பகோணம் சாலையில் உள்ள பரவனாற்று தரைப் பாலம் அருகே வந்துகொண்டிருந்தது.

அப்போது சாலையின் வளைவில் திரும்பியபோது வசந்தகுமாரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலைஓரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பிரபாகரன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரபாகரனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News