செய்திகள்

கள்ளக்காதலில் உருவான கருவைக்கலைக்க நாட்டுமருந்து தின்ற பெண் பலி

Published On 2017-04-07 14:47 IST   |   Update On 2017-04-07 14:47:00 IST
கள்ளக்காதலில் உருவான கருவைக்கலைக்க நாட்டுமருந்து தின்ற பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள கந்தப்பம்குறிச்சியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி சரண்யா(வயது 20). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

வெற்றிவேல் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சரண்யா விருத்தாலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரண்யா வேப்பூர் அருகே மேலூரில் வசித்து வரும் தனது தாயிடம் செல்போனில் பேசினார். எனக்கு உடல்நலம் சரியில்லை என்று அவரிடம் தெரிவித்தார்.

உடனே அவரது தாயார் கந்தப்பம்குறிச்சிக்கு விரைந்து வந்தார். அவரிடம் என் கணவர் இல்லாத நேரத்தில் வேறொரு வாலிபருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பம் ஆனேன். தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.

எனவே கருவைக் கலைக்க ஒருவரிடம் நாட்டுமருந்து வாங்கி சாப்பிட்டேன். இதனால் எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து சரண்யாவை சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது தாய் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சரண்யா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலில் உருவான கருவைக்கலைக்க நாட்டுமருந்து தின்ற பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News