செய்திகள்

மானாமதுரை அருகே ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

Published On 2017-03-14 13:53 IST   |   Update On 2017-03-14 13:53:00 IST
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் திருமணத்திற்கு மறுத்ததால் கைது செய்யப்பட்டார்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஓருவருக்கு கல்குறிச்சியைச் சேர்ந்த வாலிபர் கார்த்திக் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

மானாமதுரை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த கார்த்திக், மாணவியிடம்நெருங்கி பழகி உள்ளார்.

அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் கார்த்திக் பாலியல் உறவு வைத்துள்ளார். இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது தெரிய வந்ததும், திருமணம் செய்யும் படி கார்த்திக்கிடம் அவர் வலியுறுத்தினார். ஆனால் கார்த்திக் காலம் கடத்தி வந்தார்.

இதற்கிடையில் வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை, பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தபோது தான், மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து மாணவியை திருமணம் செய்யும்படி கார்த்திக்கிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திருமணம் செய்ய கார்த்திக் மறுத்துள்ளார்.

இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமிர்தம், சப்-இன்ஸ்பெக்டர் சேதுபாமா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவியை ஏமாற்றியதாக கார்த்திக் கைது செய்யப்பட்டார்.

Similar News