செய்திகள்

மானாமதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2017-03-06 16:32 IST   |   Update On 2017-03-06 16:32:00 IST
மானாமதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சோமசுந்தரம் காலனியில் வசிப்பவர் நாச்சியப்பன். இவர் கடந்த 3-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 9 பவுன் நகை, ரூ. 21 ஆயிரம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

வீடு திறந்து கிடந்ததை பார்த்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் இது குறித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Similar News